tamilnadu

img

கல்லூரி மாணவி படுகொலையை கண்டித்து முழக்கம்

கடலூர், மே 13-விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதியை, வீடுபுகுந்து கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய் துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தனிப் பிரிவு காவலர் நடந்து கொண்ட முறை, காவல் நிலையத்தில் ரகசியமாக பெறப்பட்ட வாக்கு மூலம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி இந்த கொலையில் தொடர்பு டையவர்களுக்கு கடும் தண் டனை பெற்றுதர வேண்டியும் மே 13 அன்று கருவேப்பிலங்குறிச்சியில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.ஆர்ப்பாட்டம் தொடங் கிய நிலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், தற்போது நிலவும் பதட் டமான சூழலில் ஆர்ப்பாட் டம் நடத்துவதை தவிர்க்குமாறும், போராட்டம் நடந்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கண்டன முழக்கத் துடன் கலைந்து சென்றனர். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், செயற்குழு உறுப் பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.