சிதம்பரம், ஜூன் 22- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகேயுள்ள எய்யலூர் கிரா மத்தின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மெகா போர்வெல் அமைத்து கடலூர் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுத்துச் செல் லப்படுகிறது. ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 மாத மாக குடிநீர் வழங்கப்படவில்லை. இத னால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தபட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித் தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் எய்யலூர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் அன்புமணி தலைமையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி இரண்டு நாட்களில் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.