கடலூர், அக்.31- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் கடலூர் மாவட்டச் செயலாளர் ஏங்கல்ஸ்பாபுவின் தந்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கனகராஜ் காலமானார் அவருக்கு வயது 77. தர்மல்-1 சிஐடியு பகுதிச் செயலாளராகவும், சிபிஎம் நெய்வேலி நகரக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மீனாட்சி நாதன், சிஐடியு சங்க முன்னாள் தலைவர் வி.முத்துவேல், நிர்வாகி ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.