tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளருமான  எம். சுப்பிரமணியம் பணி ஓய்வு  பெறும் நாளில் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணா மலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா. ஜோதி சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

**************

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சண்அமுகசிகாமணி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேலு உட்பட பல்வேறு தோழமை சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் என்.ஜானார்த்தனம் நிறைவுரையாற்றினார்.

**************

வேலூரில் ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் க.சரவணராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சேகர், செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாண்டவராயன், மோகனமூர்த்தி, பாபு, எஸ்.ராஜேஸ்கண்ணா, வாரா, ராமன், உள்ளிட்டோர். கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.