tamilnadu

img

காலி பணியிடங்களை நிரப்புக: மின் ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 9- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கடலூர் மாவட்ட மாநாடு  மேல்பட்டாம்பாக்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பழனிவேல்  தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலை வர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். சிறப்புத் தலைவர் எஸ்.முத்தமிழ்ச்செல்வன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். நெல்லிக்குப்பம் கோட்டச்  செயலாளர் வி.ஞானசேகரன் வரவேற்றார். துணைத் தலைவர் டி.சேகர், இணைச் செய லாளர் வி.ஏ.சிவக்குமார், செயற்குழு உறுப்பி னர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பை யன் மாநாட்டை துவக்கி வைத்தார். செய லாளர் என்.தேசிங்கு, பொருளாளர் என்.கோவிந்தராசு ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் டி. ஆறுமுகம், பொறியாளர் அமைப்பின்  மாநில பொதுச் செயலாளர் கே. அருள்  செல்வம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே. அம்பிகாபதி, சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், மாநிலக் குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாவட்டச் செயலா ளர் டி.வெங்கடாசலம், தமுஎகச மாவட்டச்  செயலாளர்  பால்கி ஆகியோர் மாநாட்டை  வாழ்த்திப் பேசினர். கோட்டத் தலைவர் டி.தனசேகர் நன்றி கூறினார்.  மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார், கோட்டத் தலைவர் டி.தனசேகரன் நன்றி கூறினார்.  தலைவராக டி.பழனிவேல், செயலாள ராக என்.தேசிங்கு, பொருளாளராக என். கோவிந்தராசு, சிறப்பு தலைவராக சி.பால சுப்பிரமணியன் உள்ளிட்ட 42 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்ப டுத்த வேண்டும், காலியாக உள்ள இடங்களை  நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அனைவரையும் பணி  நிரந்தரம் செய்ய வேண்டும், கடலூர் மின்  பகிர்மான வட்டத்தில் பணியாற்றும் பகுதி  நேர ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.