tamilnadu

கடலூர் முக்கிய செய்திகள்

வேலை வாங்கித்தருவதாக ரூ.11.15 லட்சம் மோசடி  தந்தை-மகள் கைது
கடலூர், டிச. 22- அரசுப்பணி பெற்றுத்தருவதாக 3 பேரிடம் ரூ.11.15 லட்சம்  மோசடி செய்ததாக தந்தை-மகளை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நரேந்திரகுமார் (28).தனது நண்பர்கள் முரளி, கார்த்திக் ஆகியோருடன் 2018 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தி லுள்ள மற்றொரு நண்பர் அபிஷேக் வீட்டிற்குச்சென்றுள்ள னர். அப்போது, அதேப்பகுதியைச் சேர்ந்த முனியசாமி மனைவி தெபோரால் கிறிஸ்டி (32) என்பவரை சந்தித்துள்ள னர். அவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை, சுகாதார  ஆய்வாளர் வேலைவாங்கித் தருவதாக 3 பேரிடமும் கூறியுள்ளார்.  இதனை உண்மையென நம்பிய 3 பேரும் பல தவணை களில் அவரிடம் ரூ.11.15 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால்,  அவர் வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திரும்பித் தரவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட நரேந்திரகுமார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்  அளித்தார். அதன் மீது குற்றப்பிரிவு துணை கண்காணிப்பா ளர் சுந்தரம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தார். இதில்,தெபோரால் கிறிஸ்டியும், அவரது வளர்ப்புத் தந்தையு மான செ.பௌல்சந்திரசேகரன் (68) ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரை யும் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் கைது செய்த காவல்  துறையினர் கடலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

உள்ளாட்சித் தேர்தல் வாகன சோதனை: ரூ 60 ஆயிரம் பறிமுதல்
சிதம்பரம்,டிச.21- கடலூர் மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்  நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து தீவிர வாக்கு சேக ரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட ஆட்சி யர் அன்பு செல்வன் உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும்படை  அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைதொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங் கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை  அதிகாரியும், வட்டாட்சியருமான அன்பழகன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் ஜவகர்சிங் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (29) என்பது தெரிய வந்தது. அவரது காரை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என சுரேசிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.அதற்கு சரியான பதில்இல்லை. இதைத் தொடர்ந்து சுரேஷ் காரில் கொண்டு வந்த ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.