tamilnadu

img

கடலூர் சிப்காட்  தொழிற்சாலையில் பாய்லர்  விபத்து -  4 பேர் பலி

கடலூர் சிப்காட்டில் செயல் பட்டு வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சிப்காட்டில் கிரிம்ஸன் ஆர்கானிக் பிரைவட் லிமிடெட் என்ற ரசாயனம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை காலை  எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து ரசாயனம் கசிந்தது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் மூச்சு திணறல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். 
பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய இழப்பீடு பெற்று தரப்படும். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

;