tamilnadu

சிதம்பரம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி...

சிதம்பரம்:
சிதம்பரம் அருகே புதுப் பேட்டையில் மரத்தின் மீது மோதி கார் விபத்துக் குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார் கள்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுகாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (29) இவர் நாகர்கோவிலில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உட்பட நான்கு பேருடன் காரில் சென்றுள்ளார். துக்க நிகழ்ச்சி முடிந்து 11ஆம் தேதி 4 பேரும் மீண்டும் ஸ்ரீபெரும் புதூருக்கு அதே காரில் வந்துள்ளனர். அப்போது காரை சரத்குமார் என்பவர் ஓட்டியுள்ளார்.

காரைக்கால், திருக்கடையூர் வழியாக வந்து சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதி மேட்டுப்பாளையம் அருகே‌ வரும்போது இரவு நேரத்தில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த சரத் குமார், ரகுபதி சதீஷ்குமார் (இருவரும் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்) ஆகிய 3 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.இதில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ரவிச் சந்திரன் மட்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 3 பேரின் உடல் கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டன.இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;