tamilnadu

img

ரூ.5 கோடியில் திருச்சி என்.ஐ.டியில் ஆய்வு இருக்கைகள்: முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு

சென்னை, டிச .14- திருச்சி என்.ஐ.டி-யிலிருந்து விரைவில் மேலும் பல பி.எச்.டி ஆராய்ச்சியாளர்கள் படித்துமுடித்து வெளிவரவுள்ளனர். திருச்சி என்.ஐ.டி உலகத்தரமிக்க  ஆராய்ச்சியாளர்களை யும் கல்வியாளர்களையும் உருவாக்கு வதை உறுதிப்படுத்தும் பொறுப்பை அதன்  முன்னாள் மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாணவர்களும் வெற்றி கரமான தொழில் முனைவோர்களாக வலம் வந்துகொண்டிருக்கும் சிட்டியூனி யன் வங்கி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண் இயக்குநருமான டாக்டர் என். காமகோடி,  , சுந்தரம் மியூட்  சுவல் இக்விட்டி ஃபண்ட் சிஐஓ கிருஷ்ண குமார்,  டி.எஸ்.எம் நிறுவனங்களின் குழும  இயக்குநர் , கே.மகாலிங்கம் ஆகியோர்  இந்த தகவல்களை தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து  என்ஐடியில் 10 ஆய்வு இருக்கைகள்  அமைக்க 10 கோடி ரூபாயை நன்கொடை யாக வழங்க முன்வந்துள்ளனர். பி.எச்.டி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை முழுமையாக முடிக்க உதவி செய்வார்கள்.  ஜிஏஎம் 2020 என்பது திருச்சி என்.ஐ.டி யில் படித்து முடித்து இன்று உலகில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சென்னை யில் ஜனவரி மாதம் 4ஆம் தேதி  நடைபெறும். 

ஜிஏஏம் 2020 நிகழ்வை என்.ஐ.டி திருச்சி இயக்குநர் டாக்டர் மினி தாமஸ் தொடங்கிவைக்க உள்ளதாக டாக்டர் என்.காமகோடி கூறினார். முன்னாள் மாணவர்கள் என்.ஐ.டியில் வருகை தரு ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாய் கூறினார்.   முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு  நிகழ்ச்சியில்  இந்திய பேட்மிண் டன் அணிக்கு தலைமைபயிற்சியாளராக செயல்படும் புலாலா கோபிசந்த் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த உள்ளதாக  கிருஷ்ணகுமார் கூறினார்.  “ தொழில்நுட்ப இடர்பாடு மற்றும் எதிர்கால பணிநிலை’’ என்ற தலைப்பில் விறுவிறுப்பான குழு விவாதமும் நடை பெறவுள்ளது. இதைத்தவிர பெண்கள் மற்றும்  தொழில்நுட்பம்குறித்த குழு விவாத மும்   நிதி மற்றும் முதலீடு, தொழில்முனை வோர், எனது கதை,  பூளும் வென்ட்சர்ஸ் நிறுவனத்தின் அர்பித் அகர்வால் நடத்தும் தொழில்முனைவோருக்கான பயிலரங்கம் உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளதாக ராமன் கூறினார்.