tamilnadu

img

தனியாருக்கு மடைமாற்றப்பட்ட கிராம மேய்ச்சல் நிலங்கள்

சிவகங்கை அருகே விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சிவகங்கை, ஜூலை 28- சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் மேலாயன்பட்டி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்கள், சுடுகாடு, இரண்டு ஊரணிகள், மேல்நிலைத் தண்ணீர் தொட்டி, சுடுகாடு உள்ள பகுதி யில் உள்ள நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டது குறித்து உரிய நட வடிக்கை எடுத்து ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி யுள்ளது. மேலாயன்பட்டி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை தனியாருக்கு பட்டா கொடுத்ததை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் மோகன் கேட்டுக் கொண்டுள் ளார். மேலாயன்பட்டி விவசாயிகள் சங்கத்தின் கிளைத்தலைவர் மதுரை வீரன் கூறும்போது,திருப்புத்தூர் வட்டம் மேலாயன்பட்டி  கிராம புல எண் 214  என்பது எஸ்எல்ஆர்ப்படி 214-1ல் உள்ள நிலங்கள் ஒரு ஏக்கர் 36 சென்ட்டும்,214-2ல் உள்ள 5 ஏக்கர் 18 சென்டும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தது. அரசு நிலத்தை கிராம விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்தை  நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தில் 214-2ல்  ஹெக்டர் 1-95-0ஹெக்டேர் நிலத்தை  பட்டா எண் 666ஆக மீனாம்பாள் என்கிற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. 214-3ல் 0-14-5 ஏர்ஸ் நிலம் அரசு புறம்போக்குநிலமாக உள்ளது. மீனாம்பாள் இறந்துவிட்டார்.இவருக்கு வாரிசு கிடையாது.இவர் பெயரில் உள்ள நிலங்கள் வேறு பெய ருக்கு மாறியுள்ளது.வாரிசு இல்லாத நிலங்கள் வாரிசு சான்றிதழ் பெறாமலே மாற்ற முடிந்தது எப்படி?. இச் செயல் குறித்து தேவகோட்டை கோட்டாட்சி யர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.விசாரணையில் 2012-ல் அனைத்தையும் ரத்து செய்து உத்தர விட்டுள்ளனர். இதற்கு பின்பு மீண்டும் கிராமத்திற்கே தெரியாமல் வருவாய்த்துறையினர் பட்டா கொடுத்துள்ளனர்.புல எண் 214-1,214-2ல் அழகாபுரி ஊரணி,குடிதண்ணீர் ஊரணி, மேல்நிலைத்தண்ணீர் தொட்டி,  சுடுகாடு, டிரான்ஸ்பார்ம் உள்ளது.மேய்ச்சல் நிலமாக உள்ளது. தனியார் களுக்கு பட்டா கொடுத்ததை ரத்து  செய்யும்வரை சட்டப்போராட்டத்தை நடத்துவோம் என்று மதுரைவீரன் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைச் செயலாளர் சந்திர சேகர் கூறுகையில், 2018 அக்டோபர் மாதத்தில் அழகாபுரி ஊரணிக்கரையை ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்ட மாக்க முற்பட்டபோதுதான்  சட்ட விரோத பட்டா போட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்த பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அழகாபுரி ஊரணியை மேம்படுத்தினோம்.குடிதண்ணீர் ஊரணியில் திருப்புத்தூர் எம்எல்ஏ சிவராமன் தொகுதி மேம்பாட்டு நிதி யில் சிமிண்ட் கால்வாய் அமைத்தோம்.சட்டவிரோத பட்டாவை ரத்து செய்யும் வரை விடமாட்டோம்.போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறிய தாவது: அசைன்மென்ட் பட்டாவில் 3 வருடத்திற்குள் விவசாயம் செய்ய வேண்டும்.அப்படி எதுவும் நடைபெற வில்லை. மேய்ச்சல் நிலமாகவே உள்ளது. சட்டவிரோதமாக கொடுக்கப் பட்ட பட்டாவை ரத்து செய்யும்வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர்போராட்டம் நடை பெறும். இப்போராட்டத்தின் தொடக்க மாக திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 31 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். கிளைப் பொருளாளர் முருகேசன் கூறுகையில். அரசு நிதியிலிருந்து ஊரணியை மேம்படுத்தியுள்ளோம். மேல்நிலைத்தண்ணீர் தொட்டி கட்டியுள்ளனர். சுற்றுச்சுவரோடு சுடுகாடு அமைத்துள்ளோம். மின்வாரி யத்திலிருந்து டிரான்ஸ்பார்ம் அமைத்துள்ளோம். அரசு வேலை நடக்கும்போதெல்லாம் எங்கே போனார்கள் பட்டா வாங்கிய நபர்கள்.கீழாயன் கண்மாய் கழுங்கு உள்ள பகுதியை பட்டா போட்டுள்ளனர்.இதனை ரத்து செய்யும்வரை கிராம மக்களின் போராட்டம் ஓயாது என்றார். வெற்றிவேல் கூறும்போது,இந்த சட்டவிரோத காரியத்தை செய்த அரசு அதிகாரிகளை குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அரசு அதி காரிகள் சட்டவிரோத காரியத்தை செய்ய அச்சப்படுவார்கள் என்றார். செந்தில்குமார் கூறுகையில், திருப்புவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டவிரோத பட்டாவை ரத்து செய்தவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்  கிராம நலன்கருதி சட்டவிரோத பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார். வட்டாட்சியர் தங்கமணியிடம் கேட்டபோது, நாங்கள் நேரில் பார்த்தோம். கிராம மக்கள் கூறுவது உண்மையாகும். ஆனால் நான் நட வடிக்கை எடுக்கமுடியாது.மாவட்ட வருவாய் அலுவலர்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் தெரி வித்தார்.          (ந.நி.)