tamilnadu

img

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை,செப். 14- தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்க ளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனத்தினால் பரவ லாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்பு ரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரிய லூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,  மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருது நகர், தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக திருவிடைமரு தூர் மற்றும் அரியலூரில் தலா 15 செமீ மழை  பெய்துள்ளது. கும்பகோணத்தில் 12 செமீ, அரூரில் 11 செமீ மழை பதிவாகி உள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

;