அய்யாசாமி- கோவிந்தம்மாள் தம்பதியின் ஆவேசம்
1918 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஐரோப்பியப் படையில் சேர்ந்து பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியவர் அய்யாசாமி. இதன்பின் 1921ல் கோவை கிணத்துக்கட வைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண் டார். அவ்வாண்டில் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரையை கேட்டு தம்பதியர் தங்களை காங்கிரஸில் இணை த்துக் கொண்டார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். இதன்பின் 1923ல் கோவையில் குடியேறினார்கள். அச்சமயம் காந்தியின் ஆணைப்படி கதர் இயக்கத்தை கோவையில் ஆரம்பித்தனர். மேலும் கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்தி சாலையை நிறுவினார். இந்த நிலையில் 1931 ஆம் ஆண்டில் காவலர் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் காவலரை மற்ற சாதிகளை சேர்ந்த காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. இதனைக் கேள்விப்பட்ட அய்யாசாமி, தன் மனை வியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு தலித் காவ லரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச் செய்தார். அதிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். 1951ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்றும் பெயர் சூட்டினார்.