tamilnadu

img

மூத்த தோழர் ஜீவாவின் மருமகன் மறைவுக்கு சிபிஐ இரங்கல்

சென்னை, செப்.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்திருக்கும் இரங்கல் அறிக்கை வருமாறு:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மருமகனும், கல்லூரிக் கல்வி இயக்குனருமான பேராசிரியர் சு.மணி (72) செப்.26 அன்று காலை 10.45 மணிக்கு, சென்னையில் 89, பி-2வது குறுக்குத் தெரு, வெங்கடேஸ்வரா நகர், சாலி கிராமம் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் சு.மணியின் வாழ்க்கை இணையர் உமாதேவி அரசு  மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செப்டம்பர் 28 அன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு: 94444 94657. பேராசிரியர் சு.மணி அவர்கள் மறைவுக்கும் , அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

;