சென்னை, செப்.11- தமிழக அரசு முறையாக தூர்வாராததால் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசனப் பகுதி களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா சாகுபடியும் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத் திற்காக திறக்கப்பட்டு ஒருமாத காலமாகி விட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகின்றது. அணையிலிருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடை மடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வில்லை. சாகுபடி பணிகள் தொடங்க வில்லை. பாசன வடிகால்கள் தூர்வாரும் பணி கள் மற்றும் மராமத்து பணிகள் முழுமை யாக நடைபெறவில்லை. இந்த பணிகள் வேண்டுமென்றே திட்ட மிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்து டன் காலதாமதமாக தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டு கொள்ள வழிவகை காணப் படுகின்றது. இதன் விளைவாக கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயி கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
மறுபக்கம், எவ்வித பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்கு செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 227 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணானது. காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகா மல் சேமிக்க முடியும் என்பதை அறிந்தி ருந்தும் அதிமுக அரசு இதில் கவனம் செலுத்த வில்லை. இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த ஆண்டு மேற் கொண்ட பணிகள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட தண்ணீர் சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கி றார்.