tamilnadu

img

சுவர் இடிந்து 17 பேர் பலி: சிபிஐ இரங்கல்

சென்னை,டிச.2- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில  செயற்குழு சார்பில் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில், தனியார் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 9 பெண்கள், 4  ஆண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிர்  இழந்து இருப்பது மிகக்  கொடிய துயரச் சம்பவமா கும். முன் எச்சரிக்கை நடவ டிக்கைகள் இருந்து இருக்கு மேயானால், இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்க முடியாது. வீட்டு உரி மையாளரும், அதிகாரி களும் அலட்சியம் காட்டிய தால் ஏற்பட்ட விபரீத விபத்தா கும். விபத்திற்கு காரணமான வர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். உயிர்  இழந்த 17 பேர் குடும்பத்திற் கும் தமிழக அரசு உரிய நிவா ரணம் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தெரி வித்திருக்கிறார்.

;