உதகை, ஆக. 7 - நீலகிரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங் கள், மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் மற்றும் வாகனங் கள் சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில் உதகை அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் அகநாடு மந்து பகுதியில் வசிக் கும் கு.நோஷ் அர்ஸ் என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு எருமைகள் மூன்று மரத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.