மதுரை,அக்.30- நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 2 மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்களது தந்தைகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவ ரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் உதித்சூர்யா மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதில் மேலும் கைது செய்யப்பட்ட பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகிய 4 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைதான 4 பேரும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதனன்று நீதிபதி சுவாமிநாதன் முன் னிலையில் நடைபெற்றது. அப்போது மாணவர்களான பிரவீன், ராகுல் எதிர்கா லம் கருதி அவர்களுக்கு ஜாமீன் வழங்கப் படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். 2 மாணவர்களின் தந்தைகளான சரவணன், டேவிட் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.