ஈரோடு,அக். 2- தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத் தின் சார்பில் 4 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக ஏழை பயிசி யாளர்களின் அரசுப்பணி கனவை சிதைக்கும் ஜே.டி.ஒ பணி நியமான விதித் திருத்தத்தை கைவிட வேண்டும். டி.ஒ பதவி உயர்வில் விதித் திருத்தத்தை கைவிட்டு. தற்போது உள்ள 1: 1 விகிதச்சாரத்தை தொடர வேண்டும். பதவி உயர்வின் போதும் காலமுறை இடமாறுதலின் போதும் கலந்தாய்வு முறையில் இட மாறுதல் வழங்க வேண்டும். 1.8.2019 ஆம் தேதியை தகுதியாக கொண்டு ஜேடிஒ, ஏடிஒ, டிஒ போன்ற பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் சென்னி மலை சாலையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட இணை செயலா ளர் ரா.சுமதி தலைமை வகித்தார். சங்கத் தின் ஈரோடு வட்டகிளை தலைவர் கார்த்தி கேயன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். இணை செயலாளர் தங்கராஜ், கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.