ஈரோடு,ஜூலை 7- தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூ வழங் கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளை யத்தில் செய்தியா ளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 ஆ ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும்” என்றார். நடப்பு கல்வியாண்டில் ஷூ வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு இம்மாத இறு திக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 - 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். வகுப்பறை யில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதி வேற்றம் செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.