tamilnadu

img

ஈரோடு அருகே தந்தை கொலை - மகன் கைது

ஈரோடு அருகே மதுபோதையில் தந்தை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (52). இவர் தேங்காய் உரிக்கும் பணியை செய்து வந்தார். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மோகன் சங்கர் (29) , தீனதயாளன் (27) என இரு மகன்கள் உள்ளனர். தீனதயாளன் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடித்துவிட்டு தீனதயாளன் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தந்தைக்கு , மகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன் தந்தை சங்கரை கீழே தள்ளி உள்ளார். பின்னர் தந்தையை அடித்து , நெஞ்சில் உதைத்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கர் இறந்து விட்டார். இதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 
பின்னர் அரச்சலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சங்கர் உடலை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீனதயாளனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

;