tamilnadu

img

ரயில்வே துறையை சீரழிக்காதே மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 ஈரோடு,செப். 19- மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் ரயில்வே துறையை சீரழிக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டிஆர்இயூ தொழிற்சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே துறையை சீரழிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். ஐ.சி.எப் உள்ளிட்ட  7 ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகள், 44 ரயில்வே பணிமனைகளை ரோலிங் ஸ்டாக் கம்பெனியாக மாற்றிடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பயணி கள், சரக்கு ரயில்களை கார்ப்பரேட்டுகள் இயக்கி கொள்ளையடிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி சிஐடியு - டிஆர்இயூ தொழிற்சங்கத்தின் சார்பில்  ஈரோடு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். டிஆர்இயு உதவி செயலாளர் சி.முருகேசன், நிர்வாகி பிஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.