நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
சென்னை,அக்.20- தமிழ்நாடு சட்டமன்றத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 திங்களன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாரா யணனும் போட்டியிடுகிறார்கள்.விழுப் புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி ,அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் கட்சியினரின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திண்ணை பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டா லின், பின்னர் திறந்த வேனில் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆதரவு திரட்டி னார். மாலையில் விக்கிரவாண்டியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
இரு தொகுதிகளிலும் திங்கட் கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். நாங்கு நேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடி களும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குப்பதிவை சுதந்திர மாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன. துணை ராணுவப்படை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். நாங்குநேரி தொகுதியில் 110 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறி யப்பட்டு உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதிகளுடன், புதுச்சேரி மாநி லம் காமராஜர்நகர் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 64 சட்டசபை தொகு திகளுக்கும், பீகார் மாநிலம் சமஸ்டிபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் திங்க ளன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.