சென்னை, நவ. 7- அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலை மையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பி னர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும், அனை வரும் அழைப்பிதழ்களோடு கூட்டத் தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.