tamilnadu

img

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு

சென்னை, மே 31-இந்த ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. மாணவர்கள் சேர்க்கையின் போது நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு நீட் தேர்வு கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் இந்த 2 படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில்  தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு கடந்த ஆண்டு பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டே இந்த படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. ஆனால் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் அடங்கிய குழுவினர் விவாதித்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்படவில்லை.ஆனால், இந்த ஆண்டு சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு முறை அமல்படுத்துமாறு மத்திய அரசிடமிருந்து மீண்டும் சுற்றறிக்கை வந்துள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.இது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்கப் பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அரசு முடிவு எடுத்து அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.2017 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தபோது, தமிழ்நாட் டில் நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் மாநில அரசின் நிலைபாடு. இதற்காக மத்திய அரசிடம் வாடி விலக்கு பெறும் அப்படியில்லை என்றால் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம் என்று சொல்லி வந்ததார் அமைச்சர் விஜயபாஸ்கர். பிறகு, கடைசிக் கட்டத்தில் நீட் தேர்வை நடத்தி தமிழக ஏழை-எளிய குடும்பத்தின் மருத்துவ கனவை சிதைத்தனர்.

அரியலூர் அனிதாவை அநியாயமாக இழந்தோம்.இந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்ற தொழிற் படிப்புகளுக்கு நீட் தேர்வுவை மத்திய அரசு கட்டாயமாக்கியிருக் கிறது. நீட் தேர்வின் கடுமையான பாடத் திட்டத்தால் தமிழகத்தில், கிராமப்புற மாணவர்களும், சமூகத்தில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளா தாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த 95 விழுக்காடு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளார் கள். எனவே, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக் கையில் மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக அறிவித்திருந்தனர்.தேர்தல் முடிந்த மத்திய அமைச்சரவை பதிவியேற்ற அடுத்த நாளே, சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த விவகாரத்திலும் கடந்த காலங்களைப் போன்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்து ஏற்றுக் கொள்ளபோகிறதா? என்பதுதான் தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.