tamilnadu

img

புதுவை ஆளுநர் கிரண்பேடி மாற்றம்?

புதுச்சேரி, மே 28-புதுவை கவர்னர் கிரண்பேடி அவசரமாக தில்லி சென்றுள்ள நிலையில் அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.புதுவை ஆளுநராக கிரண்பேடி 2016ல் பதவியேற்றார். கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. பதவியேற்றது முதல் கிரண்பேடிக்கும், புதுவை அமைச்சர வைக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.கிரண்பேடி சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். இதற்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில், யூனியன்பிரதேச மான தில்லியில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது.இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என நாராயணசாமி கூறினார். ஆனால், ஆளுநர்இதை ஏற்க மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்ததீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய் தது. இனியாவது கிரண்பேடி தீர்ப்பை ஏற்று மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என அமைச்சரவை வலி யுறுத்தியது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டது. தேர்தல் நன்ன டத்தை விதிகள் காரணமாக ஆளுநர் தனது செயல்பாடுகளை குறைத்து அமைதியாக இருந்து வந்தார். தேர்தல்முடிந்து நடத்தை விதிகள் திங்களன்று முடிவுக்கு வந்தது.இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கிரண்பேடிக்கு அழைப்பு வந்துள்ளது. விழாவில் பங்கேற்க கிரண்பேடி செவ்வா யன்று காலை புதுவையிலிருந்து தில்லிக்கு புறப்பட்டு சென்றார். தில்லி புறப்பட்டு செல்லும் முன்பாகபுதுவை மக்களுக்கு ஒரு கடி தத்தை எழுதியுள்ளார். அதில், புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார். இதில்தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்துதரப்பினருக்கும் நன்றி என தெரி வித்துள்ளார். இதனால் புதுவையில் இருந்து கிரண்பேடி விடைபெறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே கிரண்பேடி மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேற்கு வங்கம் அல்லது கேரளாவில்கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்பட லாம் என தெரிகிறது. தில்லி புறப்பட்டு செல்லும் முன்னர்ஆளுநர் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி ஊழியர்களிடம் கிரண் பேடி கூறி இருக்கிறார். எனவே, அவர்மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதி யாகி இருக்கிறது.கிரண்பேடிக்கு பதிலாக கர்நாட காவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் புருஷோத்தமன் புதுவை ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன.