திருவள்ளூர்,ஆக.18- திருத்தணி நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வந்த திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.16) திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள உணவகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். பட்டாக் கத்திகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மகேஷை ஓட ஓட விரட்டி, உணவகத்திற்குள் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றது. இந்த கொலையை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். ஓட்டலில் உள்ள கேம ராவில் மகேஸ் வெட்டப்படும் காட்சியும், பெண்கள் பயந்து ஓட்டம் பிடிக்கும் காட்சியும் வெளியாகி பீதியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர். மேலும், தனிப்படையும் அமைக்க ப்பட்டது.
மகேசின் நண்பர் விக்கி கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தினேசின் சகோதரர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்பு மிரட்டப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தினேஷ் வெட்ட ப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். இதில் கைது செய்யப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டனர். நண்பர்களான இவர்களை பார்க்க வந்த போதுதான் மகேஷ் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். விக்கியின் கொலை வழக்கில் மகேஷ் முக்கிய சாட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓட்டலில் வைத்து மகேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் கொலையாளிகளை விரைவாக அடையாளம் கண்டனர். இதையடுத்து பெருமாள் பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 4 பேரும் கை, கால்கள் உடைந்த நிலை யில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அவர்க ளுக்கு மாவு கட்டு போட ப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விக்கி கொலை வழக்கிலும் இந்த 4 பேரும் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 5 வது நபராக கார் ஓட்டுநர் சதீசும் கைது செய்யப்பட்டுள்ளார்.