புதுச்சேரி,டிச.5- பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரியில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக வழங்க வேண்டிய ஊதியத்தை, உடனே வழங்க வேண்டும். ஆட்குறைப்பு செய்யும் நிர்வாகத்தின் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், செல்வம், பிரதிபா, ஓய்வூதியர் சங்கத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். டிசம்பர் 4ஆம் தேதி துவங்கிய போராட்டம் வியாழனன்றும் நடைபெற்றது. இப்போராட்டத்தால் பிஎஸ்என்எல் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.