மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி யில் ஒரு பதட்டம் அடங்குவதற்கு முன்னதாக இன்னொரு பதட்டத்தை உருவாக்கி நாட்டை பதட்டம் நிறைந்த நாடாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிர கடனம் வரவேற்கத்தக்கது. பாஜகவின் தேசிய கல்விக்கொள்கைகு எதிராக முதலில் தமிழகத்தில் குரல் கிளம்பி யிருக்கிறது. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்விக் திட்டத்தை எதிர்த்து தமிழ கமே போராடியது. காமராஜர் எதிர்த்தார். ஆனால் மோடி கொண்டு வந்துள்ள இந்த தேசிய கல்விக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை. மோடியை ஒழிக என்று நாம் சொல்ல வில்லை. கற்றல் மற்றும் கற்பித்தல் தொழிலை பிராமணர்கள் மட்டுமே செய்ய உரிமை உள்ளதாக இந்த கொள்கை கூறுகிறது. பாஜக ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையையா? அம லாக்குவார்கள், ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் தான் அமலாக்கு வார்கள். இதற்கெதிராக நாம் நிச்சயமாக போராட வேண்டும்.
-இரா.முத்தரசன், சிபிஐ.