tamilnadu

img

பெருங்களத்தூர் சிங்கப்பெருமாள் இடையே 8 வழிச் சாலை

சென்னை,ஜூலை 15-    சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள  சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை15) பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின் போது பதில் அளித்த முதல்வர், “சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப் பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டது” என்றார். போக்குவரத்து நெரிசலை குறைப்ப தற்காக பெருங்களத்தூரில் பல்லடுக்கு பாலம்  அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில்  தொடங்கப்படும். சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க தேவைப்படும் இடங்களில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்ப டும். தற்போது சென்னையில் 9 மேம்பாலங் கள் கட்டும் பணி நடைபெறுகிறது. விரை வில் பணிகள் முடியும் என்றும் முதல மைச்சர் கூறினார்.

;