பிரிட்டன் பிரதமர் தெரெசா மே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இலங்கையில் மோதல் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்த அனை வரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையுடனான எமது உறவு முக்கியமானது, குறிப்பாக ஈஸ்டர் துயர நிகழ்வுகளுக்குப் பின்னர், அமைதியான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாகஇணைந்து செயல்படுவது முக்கிய மான ஒன்றாகியுள்ளது” என்று குறிப் பிடப்பட்டுள்ளது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட பல தமிழ்கனடியர்களை நான் சந்தித்து உரையாடி யுள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெரிய சிரமம் மற்றும் தொடர்ச்சி யான பின்னடைவை அவர்கள் சந்தித்துள் ளார்கள்”.“போரில் உயிர் பிழைத்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கத்தை நான்வலியுறுத்துகிறேன். இலங்கை அரசாங்கத் திற்கு மட்டுமின்றி பொறுப்புணர்வு, நீதி,சமாதானம் மற்றும் சமரசத்திற்காக செயல்படும் அனைவருக்கும் கனடா தனது முழு மையான ஆதரவை வழங்கி வருகிறது.போரின்போது பிரியமானவர்களை இழந்த தமிழ்-கனடியர்கள் உள்பட அனைவருக்கும் கனடா அரசின் சார்பாக எனதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்-கனடியர்கள் நாட்டிற்கு செய்துள்ளபல பங்களிப்புகளையும் அவர்கள் கடந்து வந்த துன்பங்களையும் அங்கீகரிக்க இன்றைய தினம் அனைத்து கனடிய மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள் போன்றவற்றால் உடல் மற்றும் உணர்வு ரீதியிலான வடுக்களை கொண்டிருக்கும் அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த வகையில், சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் முன்னெடுப்புகளை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.