tamilnadu

img

கடலோரப்படை கப்பலில் தீ

விசாகப்பட்டினம், ஆக. 12- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கடேலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடலில் இருந்த ஜாக்கு வார் என்ற அந்த கப்பலில் முதலில் அதிக சப்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த கப்பலில் பணியில் இருந்த 29 பேரும் உயிரை காத்துக் கொள்வ தற்காக தண்ணீருக்குள் குதித்துள்ளனனர். இந்திய கடலோர பாதுகாப்பு படையின் ராணி ராஷ்மோனி என்ற மற்றொரு கப்பல் அருகில் இருந்ததால், உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பாதுகாப்பு மிதவைகள் வீசப்பட்டதை அடுத்து தண்ணீரில் குதித்த 29 பேரில் 28 பேர்  மீட்கப்பட்டனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  (பிடிஐ)

;