“இந்த காலை வேளையில் உணர்ச்சிகரமான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. ஆலாத்தூரிலிருந்து பிரணவ் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் ஒரு ஓவியர். சட்டமன்ற அலுவலகத்தில் என்னை சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பினை அளித்துவிட்டு செல்வதற்காக வந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு அளித்து வரும் ஆதரவு குறித்து உளப்பூர்வமான தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என்று மகிழ்ச்சி பொங்க தமது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். மாற்றுத் திறனாளிகள் மீதான கம்யூனிஸ்ட்டுகளின் பேரன்புக்கு சாட்சியம் இந்த சந்திப்பும், சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படங்களும். (செய்தி : 3)