tamilnadu

img

நூறாண்டுகளில் இந்தித் திணிப்பு மூலம் அழிக்கப்பட்ட 25 வட இந்திய மொழிகள்!

நூறாண்டுகளில் இந்தித் திணிப்பு மூலம் 
அழிக்கப்பட்ட 25 வட இந்திய மொழிகள்!

இந்தித் திணிப்பு காரணமாக, கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், வட இந்திய மாநிலங்களின் 25-க்கும் தாய்மொழிகள் அழிக்கப்பட்டிருப்ப தாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு  தொடர்பாக திமுக தொண்டர்களு க்கு அக்கட்சித் தலைவரும் முத லமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

 இந்தித் திணிப்பை எதிர்ப்பது, எதற்காக?

இதே கேள்­வியை அப்போ­தும்  கேட்­ட­னர். இந்தி என்­பது ஒரு சில நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பாக, சமஸ்­கி­ரு­த­மும் மேலும் சில மொழி களும் கலந்து திரிபடைந்ததால் உரு­ வான மொழி. ஆனால், தமிழ் ஆயி ரக்கணக்கான ஆண்­டு­கள் பழமை யான மொழி. தன்­னி­லி­ருந்து திரா­வி­டக் குடும்பத்து மொழி­களைக் கிளைத்­தி­டச் செய்த தாய்மொழி. சிறப்­பு­ மிக்கத் தமிழ்மொழியை இந்தி மொழி­யாலோ, இந்­தியை முன்­னி­றுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்­கும் சமஸ்­கி­ரு­தத் ­தாலோ ஒருபோ­தும் அழிக்க முடியாது.

மொழி மட்டுமல்ல,  பண்பாடு அழியும்

பிறகு எதற்­காக அவற்றை நாம் எதிர்க்­கி­றோம்? அதற்­கான கார­ண த்­தை பெரியார் அன்றே சொன்­ னார். “இந்­தி­யால் தமிழ் அழி­யாது. ஆனால், தமிழ் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்­கா­ரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்­ட­ரசி ஆவது நிச்சயம்” என்று எச்­ச­ரித்­தார். அண்­மை­யில் குடி­ய­ரசு துணைத்  தலை­வர் ஜக­தீப் தன்­கர் இந்­தியா மீதான முந்­தைய படை­யெ­டுப்­புகள் குறித்­துப் பேசிய­ போது, “ஒரு மாநி­ லத்­தைக் கைப்பற்ற வேண்­டு­மென் ­றால், அதன் கலாச்சா­ரத்தை கையி­லெ­டுப்­ப­தும், மொழியை அழிப்­ப ­துமே சிறந்த வழி” என்று குறிப்­பி ட்­டதை மறக்க முடி­யாது. ஒன்­றிய பாஜக அரசின் கொள்­கையே அது ­வா­கத்தான் இருக்­கி­றது.

ஆபத்தை உணராத  வட இந்தியர்

இந்தி ஆதிக்­கத்தை உணர முடி­யா­மல் போன­வர்­க­ளின் தாய்­மொ­ழி­கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்­தில் கரைந்து காணா­மல் போன துயர வரலாற்றை, இந்தி பர­ விய நிலப்­ப­ரப்பெங்­கும் காண முடியும். இந்தி மொழியை ஏற்­றுக்­கொண்ட பீகார் மாநில மக்­க­ளின் சொந்த மொழியான மை­திலி, அந்த  மாநி­லத்­தின் அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­னர் அறிய முடி­யாதபடி வழக் ­கொ­ழிந்­தது. அண்­மைக் ­கா­ல­மா­கத்­தான் மை­திலி மொழி பேசும் மக்­கள் மெல்ல விழிப்பு­ணர்வு பெற்று, தாய்­மொ­ழியை மீட்டெ­டுப்­ப­தற்­கான நடவ­டிக்­கை­க­ளைத் தொடங்கி­ யுள்­ள­னர்.

உ.பி., பீகார் தாய்மொழிகள் எங்கே?

இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம் உத்தரப்பி­ர­தே­சம். இந்­தி­தான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பல­ரும் நினைப்­போம். ஆனால், உண்மை அதுவல்ல. வட­மேற்கு உத்­த­ர­ப்பி­ரதேச மக்­க­ளின் மொழி பிரஜ்­பாஷா, தென்மேற்கு உத்­தர பிர­தே­சத்­தின் தாய்மொழி புந்­தேல்­கண்டி. வட­கி­ழக்கு உத்­த­ர­ப்பி­ர­தே­சத்­தின் சொந்த மொழி போஜ்­புரி. மத்­திய உத்தரப்பிரதேசத்தின் உள்­ப­கு­தி­க­ளில் பேசப்­பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்­ணோஜி என்ற மொழி­யும் இப்­ப­கு­தி­யில் வழக்­கில் இருந்­தது. இருந்த உத்­த­ர­ப்பி­ர­தே­சத்­தில் பிரிக்­கப்­பட்ட மாநி­ல­மான உத்­த­ர­கண்­டில் வாழும் மக்­க­ளின் பூர்வீகமொழி கடு­வாலி மற்­றும் குமோனி.

சிதைக்கப்பட்ட மைதிலி, போஜ்புரி

 இதுபோன்ற மண்­ணின் மைந்த ­ ர்களு­டைய மொழி­கள் அனைத்­தை­ யும் இந்தி என்­கிற ஆதிக்க மொழி­யின் படை­யெ­டுப்பு சிதைத்­து­விட்டது. போஜ்­புரி, ஆவ்தி போன்ற மொழி கள் பெரும் அவ­திகளுக்­கி­டையே இப்­போ­து­தான் மெல்­லத் துளிர்க்­கின்­றன. இவை மட்­டுமா? ஹரி­யாண்வி, ராஜஸ்­தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்­தலி, சட்­டீஸ்­கரி, கோர்பா உள்­ளிட்ட மொழி­கள் பேசு ­வோ­ரைத் தேட வேண்­டி­யுள்­ளது. பூர்­வீக மொழிகள் சிதைக்­கப்­பட்டு, அழிக்­கப்­பட்ட நிலை­யில், அந்த மொழி பேசும் மக்க­ளின் பண் ­பாட்டு விழு­மி­யங்க­ளும், இலக்கியச் செழு­மை­க­ளும், மர­பார்ந்த அறிவுத் ­தி­ற­னும் இருந்த இடம் தெரி­யா­மல் மறைந்து போயி­ருக்­கின்­றன.

25 வட இந்திய மொழிகள்

அழிப்பு வட ­இந்­திய மாநி­லங்­க­ளில் 25-க்கும் மேற்­பட்ட அந்தந்த மண்­ணின் தாய்மொழி­களை கடந்த ஒரு  நூற்றாண்டு காலத்­தில் இந்­தி, ச­மஸ்­கி­ரு­தம் எனும் ஆதிக்க மொழி ­க­ளின் படை­யெ­டுப்பு சிதைத்­தி­ருக் ­ கி­றது. ஆனால், தொடர்ச்­சி­யா­ன போராட்­டத்­தி­னா­ல் நம் தாய்த்தமிழ் மொழி காப்பாற்றப்­பட்டு, தமி­ழர்­க­ளின் பண்பாட்டு பெரு­மை­கள் நிலைநிலைநிறுத்தப்பட்டு இருக்கின் ­றன. இதனை சீர்­கு­லைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் ­தான் ஒன் ­றிய பாஜக அர­சின் தேசிய கல்­விக் கொள்கை மூலம் இந்­தி, ­­ச­மஸ்­கி­ருத மொழி­க­ளைத் திணிக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இத­னை ­உ­ணர்ந்­தி­ருப்­ப­தால்­ தான் தமிழ்­நாடு எதிர்க்­கி­றது.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.