தொழிலாளர்கள் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் சிங்காரவேலர்
“சிந்தனைச் சிற்பி” ம.சிங்கார வேலர், கடந்த 1860ஆம் ஆண்டு பிப்ர வரி 18 ஆம் நாள் சென்னை மயிலாப்பூ ரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீன வர் சமுதாயத்தைச் சேர்ந்திருந்தாலும், சிறு வயது முதற்கொண்டே கற்றறி வதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டி ருந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றவர். ஏழை மக்களுக் காக சட்டம் பயின்றதோடு, அவர்களின் உரிமைக்காகச் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகவும் பணி யாற்றினார்.
தனது இல்லத்தில் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரிய பல புத்த கங்களைக் கொண்ட நூலகத்தையும் அமைத்திருந்தார். 1918ஆம் ஆண்டு தமிழறிஞர் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களால் தொடங்கப்பட்ட, “சென்னை தொழிலாளர் சங்கத்தில்” இணைந்து பணியாற்றினார். பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காக, “சிந்தனைச் சிற்பி” என போற்றிப் புகழப்பட்டார்.
1923 ஆம் ஆண்டு ‘மே’ 1 ஆம் நாள் இந்திய வரலாற்றில் முதன்முறை யாக, செவ்வண்ணக் கொடியோடு தேசியக் கொடியை ஏற்றி வைத்து ‘மே’ முதல் நாளைத் தொழிலாளர் தினமாக கொண்டாடினர். பல்வேறு மொழிகளை கற்றுணர்ந்த போதும், தாய்மொழியாம் தமிழ் மொழிக் கொள்கையில் தளராத உறுதி கொண்டிருந்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். சென்னை மாநகராட்சி உறுப்பின ராகப் பதவியேற்ற போது தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு, “உறுப்பினர்கள் அனைவரும் இனித் தமிழில்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
தொழிலாளர்கள் நலனுக்காகத் தம்மையே அர்ப்பணித் துக் கொண்டவர் அவர். சுயமரியாதை, சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்து வந்தார். கலைஞர் ஆட்சிக் காலத்தில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிலை யானது 11.6.1998 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. “சிந்தனைச் சிற்பி” ம.சிங்கார வேலர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப் பட்டது. ம.சிங்காரவேலரின் பிறந்த நாளாகிய பிப்.18, ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ம.சிங்காரவேலர் 166 ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், செவ்வா யன்று காலை 9.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மேயர், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்: முதல்வர்
சிங்காரவேலர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், “இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரி யாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழை யாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடு தலைப் போராளி, இதழாசிரியர், எழுத் தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பி னர் என பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் இன்று!
தாம் வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டபோது குடியரசு இதழுக்கு வழி காட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதும் சிங்காரவேலரைத்தான்! “போர்க்குணம் மிகுந்த நல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றிய தும் அவரைத்தான்! தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ் வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார்.