tamilnadu

img

இந்தியாவின் கூட்டாட்சிக்கு பாஜக ஆட்சியில் ஆபத்து

இந்தியாவின் கூட்டாட்சிக்கு பாஜக ஆட்சியில் ஆபத்து

முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் பேச்சு

ஒன்றிய பாஜக  ஆட்சியால் இந்தியா வின் கூட்டாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக் கிறது என்று முத லமைச்சர் தெரிவித்  துள்ளார். இது குறித்து அவர் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழக ஆளுநரின் அரசியலமைப்புக்கு முரணான அத்துமீறல்களையும், அதற்கான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் இழிவான ஒப்புதலையும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளது.

கடுமையான வார்த்தைகளால் எழுதப்பட்ட அந்த தலையங்கம், ஆளுநர் சட்டமன்றத்தை தன்னிச்சையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியது குறித்தும், பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை என்பதையும் வலுவாக குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்வதிலிருந்து மாநிலத்தின் பெயரளவிலான தலைவரான ஆளுநரோ அல்லது அவரது செயல்களை தொடர்ந்து பாதுகாத்து- வளர்க்கும் தில்லியில் உள்ள அவரது பாஜக எஜமானர்களோ எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது திகைப்பூட்டும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் வெறுக்கத்தக்க மற்றும் அரசியலமைப்புக்கு முரணான செயல்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, அரசியல் பகைகளைத் தீர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு இத்தகைய அத்துமீறல்களுக்கு வெகுமதி அளிக்கிறது.

பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது.  இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.