tamilnadu

இணையமைச்சர் வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம்!

இணையமைச்சர் வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம்!

சென்னைப் பயணத்தை ரத்து செய்த தர்மேந்திர பிரதான்

 

சென்னை ஐஐடி-யில் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறும் விழாவில், ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வார் என்று அறி விக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதி ராகவும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

முதல் வெற்றி

“வட இந்திய மாநிலங்களில் பேசப்பட்டு வந்த 250-க்கும் மேற்பட்ட அந்த மக்க ளின் தாய்மொழிகளைக் கடந்த ஒரு நூற்றா ண்டில் இந்தி எனும் ஆதிக்க மொழிப் படை யெடுப்பு சிதைத்துள்ளது. தற்போது தமிழ கத்துக்குள் மும்மொழிக் கொள்கை என்ற முகமூடி அணிந்து நுழைய முயற்சிக்கிறது. மேலும் இந்தியின் வழியே சமஸ்கிருதத்தை திணித்துத் தமிழர்களின் பண்பாட்டைச் சிதை க்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (பிப்.28) தமிழகத்துக்கு வருகை தருவதாக இருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பு களும் திட்டமிட்டிருந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டி ருப்பது, தமிழகத்தின் உணர்வெழுச்சிக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.

கருப்புக் கொடி . ஆர்ப்பாட்டம்

எனினும், ஐஐடி-யில் நடைபெறும் விழாவில் ஒன்றிய கல்வித் துறை இணை  அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வ தாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும்  கண்டிப்பதல்ல, தமிழகத்துக்கு நிதி தர மறுத்து, இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் ஒன்றிய அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் என்பதால், ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தா ருக்கும் கருப்புக் கொடி காட்டுவது என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், சமூக நீதி மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், திராவிட மாணவர் கழகம், திராவிட மாண வர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, புரட்சிகர மாணவர் - இளை ஞர் முன்னணி, மக்கள் நீதி மய்யம், மதிமுக மாணவர் அணி, மாணவர் இந்தியா, முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்துள்ள “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN)” சார்பில், சென்னை, ஐஐடி வாயிலில் வெள்ளி காலை 9.30 மணியளவில் “மாபெரும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” இவ் வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.