tamilnadu

வங்கி மோசடி வழக்கு நிர்வாகியின் சிறை தண்டனை ரத்து

வங்கி மோசடி வழக்கு  நிர்வாகியின் சிறை தண்டனை ரத்து

சென்னை, ஜூலை 20 - ரூ.1.42 கோடி கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்ட னையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தி யன் வங்கி கிளையில் 1991-98 கால கட்டத்தில்  போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று  வங்கிக்கு 1.42 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத் தியதாக விஷ்ணுவர்தன் கிரானைட்ஸ் நிறு வனம் மற்றும் அதன் பங்குதாரர் ராம கிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர்  சுப்புராமன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த, வங்கி மோசடி  வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.1.55 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. வங்கியின் தலைமை மேலா ளர் சுப்புராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தனர். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். ராமகிருஷ்ண பிரசாத்துக்கு குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு களின்கீழ் விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த நீதிபதி, மற்ற பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தார். வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன், மண்டல அலுவலகம் வாய்மொழியாக தெரி வித்த ஒப்புதலின் காரணமாகவே கடன் கொடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை  தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். 1.55 கோடி ரூபாய் அபராதத் தொகையை இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.