மாநிலங்களவைக்கு தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை, மார்ச் 9 - தமிழ்நாட்டில், விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோரும், அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் திங்களன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், மேற்கண்ட 6 பேர் மட்டுமே போட்டியில் இருந்ததால், அவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக