tamilnadu

img

ஆளுமைகள் குறைந்து வரும் சூழல்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை

ஆளுமைகள் குறைந்து வரும் சூழல்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை

கோவை, ஏப்.29– குழந்தைகளை சுயமாக செயல் பட அனுமதியற்ற நிலை உள்ளது. இதனால் ஆளுமைகள் குறைந்து வரும் சூழல் நிலவுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தனது கவலையை வெளிப்படுத்தினார். விஜயா பதிப்பகம், விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் உலகப் புத்தக தின விருதுகள் வழங்கும் விழா கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி  வளாகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த விழாவிற்கு தலைமை யேற்று விருதுகளை வழங்கிய நீதி பதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசு கையில், எழுத்தாளர்களுக்கு மட் டும்தான் எது நிரந்தரம் என்பது தெரி யும். புத்தகம் படிப்பது சவாலானது. ஆனால், யாருக்கும் பொறுமை இல்லை. அதனால் கவனச்சிதறல் அதிகரித்துள்ளது. பெரிய படைப் பாளிகள் தங்களைச் சுற்றி நிகழும் அனைத்தையும் கவனித்து பதிவு செய்ததால்தான் சமுதாயம் இன்ன மும் அவர்களை நினைவில் வைத் துள்ளது. இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடி யாது. குழந்தைகளை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால், வீட்டிலும், பள்ளியிலும் அது நடப்பதில்லையே. இன்றைய சூழலில் ஆளுமைகள் குறைந்து கொண்டே வருகிறது. அதைப் போலவே அங்கீகரிக்கும் கூட்ட மும் குறைந்து வருகிது. இது இலக் கியத்தில் மட்டுமல்லாமல் அனைத் துத் துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. கைப்பேசி, மடிக் கணினி போன்றவற்றரால் திரைக ளையே அனைவரும் பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால், தன் னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ப தைக் கூட உணர முடியாததால், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத நிலை தற்போதைய தலைமுறைக்கு சவாலாக உள்ளது. புத்தகங்க ளைப் படிக்காமல், சொல்லிற்கும் செயலுக்கும், தொடர்பே இல்லா மல் வாழ்ந்து வரும் நிலை கவலைக் குரியது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில், நடப்பு ஆண்டுக்கான ஜெயகாந் தன் விருது, ரூ.1 லட்சம் ரொக்கம் தங்க நகைப் பாதை நாவலுக்காக எழுத்தாளர் மு.குலசேகரனுக்கும், புதுமைப்பித்தன் விருது எழுத்தா ளர் குமாரநந்தனுக்கும், கவிஞர் மீரா விருது கவிஞர் மதாருக்கும், சக்தி வை.கோவிந்தன் விருது செங் கோட்டை அரசு கிளை நூலகர் கோ. ராமசாமிக்கும், வானதி விருது தென் காசி வீர சிவாஜி புத்தக உலகம் ஏ.சுகுமாருக்கும், அன்பின் பெரு மழை அப்பச்சி பழனியப்பர் விஜயா பதிப்பகம் தொடர் வாசகர் விருது சுப.மீனாட்சி சுந்தரம், ராஜ் சௌந் தர், விமலா நி.அகிலா ஆகியோருக் கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீ னம் தவத்திரு சாந்தலிங்க மருதா சல அடிகளார், ஆவணப்பட இயக் குநர் கவிஞர் ரவிசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசி னர்.