பணியிடங்களில் பாதுகாப்பு கேட்டு மாதர் சங்கம் மாநாட்டில் தீர்மானம்
திருவள்ளூர், ஜூலை 17- பெண்கள் வேலை செய்யும் இடங் களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது, இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு, திருவள்ளூர் ஒன்றிய தலைவராக பெர்னா, செயலாளராக கலைவாணி, பொரு ளாளராக ராஜலக்ஷ்மி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை வட்டத் தலைவராக புஷ்பலதா, செயலாளராக ரம்யா, பொரு ளாளராக அனிதா ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர். பொன்னேரி பகுதி தலைவராக சற்குணம், செயலாளராக லாவண்யா, பொரு ளாளராக நாகலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சோழவரம் சோழவரம் ஒன்றிய தலைவராக ரமணி, செயலாளராக சரளா, பொருளாளராக ருக்மணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மீஞ்சூர் ஒன்றிய தலைவராக கவிதா, செயலாளராக புவனேஸ்வரி, பொருளாள ராக ரதியா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி வட்டார தலைவராக மாரி, செயலாளராக காமாட்சி, பொருளாள ராக மெகரு நிஷா ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர். பூந்தமல்லி ஒன்றிய தலைவராக செல்வி, செயலாளராக சசிகலா, பொருளாளராக தமிழ்அழகி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். திருத்தணி திருத்தணி ஒன்றிய தலைவராக தீபா, செயலாளராக குமாரி, பொருளாளராக அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். ஆர்கே பேட்டை ஒன்றிய தலைவராக சுகுணா, செயலாளராக வித்யா, பொருளா ளராக வள்ளி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இந்த மாநாட்டில் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, பொருளாளர் பி.சசிகலா உள்ளிட்ட நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.