tamilnadu

img

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலைஞர்கள், நாடகவியாளர்கள் , கலை இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  சங்கரதாஸ் சுவாமிகள்  சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக காந்தி வீதியில் இருந்து கலைஞர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.