பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து அனைத்து அரசு வங்கிகள், இன்சூரன்ஸ் துறைகள் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஓசூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க கிளைச் செயலாளர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் தலைவர் தீபா ராணி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எக்ஸிகியூட்டி கவுன்சில் மெம்பர் சி.உண்ணாமலை (இந்தியன் வங்கி),எல்ஐசி முகவர்கள் சங்க மண்டல தலைவர் முருகன் நாயனார்,கிளை நிர்வாகிகள் சொன்னப்ப,அண்ணாஜி கலந்து கொண்டனர்.
