tamilnadu

img

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் - 2 பேர் படுகாயம் 

ராமேஸ்வரம் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வந்த பகுதியில் இலங்கை கடற்படையை சார்ந்த போர்க்கப்பல் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில், மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்து நாசப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் காரணமாக 2 தமிழக மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, அப்பகுதியை விட்டு தமிழக மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கடந்த 3 மாத காலமாக தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில் அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;