திருச்சிராப்பள்ளி, செப்.17 - திருச்சி மாவட்ட நிர்வா கம் மற்றும் நேசனல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் ‘திருச்சி எழுதப் போகும் புதிய வரலாறு’ என்ற தலைப் பில் புத்தகத் திருவிழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத் தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழா செப்.25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறு கிறது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச் சர் கே.என்.நேரு தலைமை வகித்து தொடங்கி வைத் தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான் மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வர வேற்றார். விழாவில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா வின் ‘திருச்சி கூறும் வரலாறு’ புத்தகத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். நூலை அறிமுகப்படுத்தி, தமுஎகச மாநில தலைவர் எழுத்தாளர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உரை யாற்றினார். இந்த புத்தகக் கண்காட்சி 5 ஏக்கர் பரப்பளவில் 160 புத்தக அரங்குகளோடு, 150- க்கும் மேற்பட்ட பதிப்பாளர் கள் மற்றும் லட்சக்கணக் கான புத்தகங்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம், வான் நோக்கு தல் ஆகியவை காட்சிப்படுத் தப்பட்டுள்ளன.
விடுதலைப் போரில் தமி ழகத்தின் பங்கு, கீழடி தொல் லியல் ஆய்வு, திருச்சி மாவட் டத்தின் சிறப்பு, திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் அரங்கு, சிறுவர் சினிமா மற்றும் மகளிருக்கான அரங் குகள் என பன்முகத் தன்மை கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் தினந் தோறும் மாலை கலை நிகழ்வுகள், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையா ளர்களின் உரை மற்றும் திருச்சி மாவட்ட அறிஞர்கள், எழுத்தாளர்களை பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த அரங்குகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை மாலை வழக்கறிஞர் அஜிதா உரை, கவிஞர் நந்தலாலா குழு வினர் பட்டிமன்றம், கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.