மாநிலக்குழு கடும் கண்டனம்
சென்னை, ஜூன் 14 - சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகளை கொலைவெறியோடு தேடி வந்த கும்பல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக்கிச் சூறையாடி யுள்ளது. இதனைத் தடுத்த தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறையினர் இருந்தபோதே அந்தக் கும்பல் அராஜகத்தை அரங் கேற்றியுள்ளது. நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அதர்ஷ் பசேரா எடுத்த நடவடிக்கையின் பேரில் தாக்குதல் நடத்திய கும்பலில் 10 பேரை கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. எனினும், முக்கிய நபரான பந்தல் ராஜா உள்ளிட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாக கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, நெல்லை மாவட்டக் குழு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றை விடுத்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
6 ஆண்டுகளாக காதலித்துத் திருமணம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத் தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், வியாழனன்று (ஜூன் 13, 2024) திருமணம் செய்து கொண்டனர். வெள்ளியன்று (ஜூன் 14, 2024) மேலப் பாளையம் சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவுத் திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.
25 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி அராஜகம்
இதனைப் பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில், பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணு கினர். காவல்துறை அனுமதியோடு திரு மணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக் குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பா கவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காதல் தம்பதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!
தாக்குதலைத் தடுக்க முயன்ற கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கு. பழனி, அருள்ராஜ் மற்றும் முருகன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரைப் பிடித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடரும் சாதி ஆணவக் கொலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்ப தாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நட வடிக்கை எடுப்பதுடன் - சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.