சென்னை,அக்.30- மதுரையில் வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கி, பணிகளை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில்தான் தமிழகத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குடியிருப்பு பகுதி களை மழைநீர் சூழ்ந்து பொது மக்கள் அவதிப்பட்டனர். கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பல்வேறு கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சு. வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். இந்நிலையில் அக்டோபர் 30 அன்று மதுரைக்குச் சென்ற முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, மதுரையில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறு வதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.