tamilnadu

img

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று (செப்.17) சென்னையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எச்.என்.நாகமோகன்தாஸ் பேசினார். உடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சங்கத்தின் செயல் தலைவர் ஏ.கோதண்டம், பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன், பொருளாளர் சிவக்குமார், அகில இந்தியஇணைச் செயலாளர் கே.இளங்கோ, சென்னை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.

;