tamilnadu

551 கோவில்களில் திருப்பணிக்கு அனுமதி

சென்னை,டிச.23- வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் 551-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அக்குழு வின் பரிந்துரையின் அடிப்படையில் அனு மதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 551-க்கும் மேற்பட்ட கோயில்க ளுக்கு திருப்பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடி வுற்றவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

;