tamilnadu

img

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான முறைகேடு வழக்கு

புதுச்சேரி, செப்.5- புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் குர்மித் சிங் மீதான வழக்கு விசா ரணை உச்சநீதிமன்றம் அமர்வுக்கு மாற்றப்பட்டது. புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு  முறைகேடுகள் நடந்துள் ளது. இந்த முறைகேடுகள் சம்பந்த மாக உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை  எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டு மையத்தில் பல  கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரியவந்தது.  இதையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மனிதவள மேம்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குநரும் முன்னாள் பேராசிரியருமான ஹரிகரன் மீது புகார்கள் வந்தன. இந்த புகார்களை தள்ளுபடி செய்வதற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு புகார்களை தள்ளு படி செய்த பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேரா சிரியர்  குர்மித் சிங் மற்றும் முறைகேடுகளை மறைப்ப தற்கு உதவி புரிந்த நிதி அலுவலர் பேராசிரியர்  லாசர் ஆகியோர் மீது  உரிய விசாரணை நடத்தி தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய புலனாய்வுத்துறை சிபிஐக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முன்னாள் செயலாளர் ஆனந்த் புகார் அளித்தி ருந்தார்.  இந்த புகார் மீது சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பிறகு, தான் அளித்த புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, புகார் குறித்து சம்மந்தப்பட்ட நபர்மீது சிபிஐ வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கடந்த 2023 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டி ருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து புதுவை  மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக நிதி அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு அளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,  புதுவை மத்திய பல்கலைக்கழகம் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வ தற்கு எந்த விதமான அடிப்படை முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது. இதை  எதிர்த்து பேராசிரியர் குர்மீத் சிங், பேராசிரியர் ஹரிஹரன் மற்றும் புதுவை மத்திய பல்கலைக்கழகம் சார்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இவ் வழக்கு  உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 3) விசா ரணைக்கு வந்த போது இவ்வழக்கில், ஊழல் தடுப்பு சட்டத்தின் 17 ஏ பிரிவு சம்பந்தமான தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டி இருப்பதால், இவ்வழக்கி னை சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கினை  சந்திர பாபு நாயுடுவின் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.வி. சுரேந்திரநாத் ஆஜரானார்.