நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊதியங்கள் திருத்தச் சட்டமுன்வடிவின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய தமது முதல் உரை:
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் நீதிபதிகளின் ஊதியங்கள் திருத்தச் சட்ட மசோதாவில் நான் மிகவும் குறிப்பிட்டுக்கூற விரும்புவது நீதித்துறையின் சுதந்திரமாகும். இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம், நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கானது என்று சட்ட அமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கி றார். இதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆனாலும், இதுபோன்ற விஷயங்களைத் தீர்மா னிக்கும்போது ஓர் ஆழமான இடைவெளி இருப்பதை சட்ட அமைச்சர் புரிந்துகொண்டிருக்கிறாரா? நீதிபதி களின் நியமனத்தைப் பொறுத்தவரை நமக்கு எவ்வித மான பங்கும் கிடையாது. இதுபோன்ற நிலைமை உலகில் வேறெங்கும் இருக்கிறதா? கிடையாது. நீதிபதி களே, நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த ‘விசித்திரமான’ நிலை குறித்து சட்ட அமைச்சர் ஓர் உறுதியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. ‘விசித்திரமான’ நிலை என்பதை நான் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். மக்களவையில் இந்தச் சட்டமுன்வடிவு விவாதத் திற்கு வந்தபோது அவர் அளித்திட்ட பதிலைப் பார்த்தேன். அங்கே நீதித்துறை, அரசாங்கம், நாடாளு மன்றம்/சட்டமன்றம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்திருந்தது. மக்க ளும் தங்களுக்கு நீதி வழங்குபவரின் தகுதி, திறமை, நேர்மை குறித்து தெரிந்து கொள்ளட்டுமே. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள்சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா, என்ன? இது போன்ற நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலாவது உண்டா? இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற நிலை. இது தொடர்பாக சட்ட அமைச்சர் எதுவுமே கூற வில்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை சிதைத்திடும் இந்த நடைமுறை குறித்து அவர் எதுவுமே தன் பதிலில் கூறவில்லை. இந்த நடைமுறை ஒட்டு மொத்த நாட்டை யும் பாதிக்கிறது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.
நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நாம் ஓர் அனுசரணையான போக்கை, கொடுக்கல் வாங்கல் போக்கைக் கடைப்பிடிக்கிறோமா? அதிகாரம் கொண்ட ஒரு சிறுகுழு நீதிபரிபாலனம் செய்யும் முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா? வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏராளமான அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இது குறித்து எதுவும் கூறுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து நம்மைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நீதித்துறையின் ‘வாரிசு அரசியல்’
நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து வந்து நேர்மை யான நீதி வழங்கிய எண்ணற்ற நீதிபதிகளும் உண்டு. ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள். உயர்நீதிமன்ற இணைய தளத்தில் ஒரு நீதிபதியின் தன்விவரம் குறித்துப் படிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அவர் பெயரை நான் குறிப்பிடவில்லை. அவருடைய தாய்வழித் தாத்தா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்தவர். அவருடைய மாமா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, இவ்வாறு அது நீண்டு போய்க் கொண்டிருக்கிறது. இங்கே நாம் வம்சாவளியினரின் ஆட்சி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சி யில் உள்ள வம்சாவளியினர் குறித்து பாஜக உறுப்பினர் கள் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்கள். ஆனால் நீதிபதிகள் நியமனம் என்பது மிகவும் தெளிவான முறையில் வம்சாவளியாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் ஏன் மவுனம் கடைப்பிடிக்கிறோம்?
அரசிடம் இருந்து வந்த முன்மொழிவை உச்சநீதி மன்றம் ரத்து செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு பண்டமாற்று முறையைக் கடைப் பிடிக்கிறது என நான் குற்றம்சாட்டுகிறேன். இந்த அர சாங்கம் அவர்களுக்குப் பொருந்தாத நபர்களின் நிய மனங்களை வெற்றிகரமானமுறையில் நீக்கிவிட்டது. சட்ட அமைச்சர் அவர்களே, நான் என்ன பேசிக்கொண்டி ருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். உச்சநீதி மன்றத்தின் கொலிஜியம் எவர் பெயரையாவது பரிந்து ரைத்தால், அவர் தங்களுக்குப் பொருத்தமானவர் அல்ல என அரசாங்கம் நினைத்தால் அதனை ஏற்றுக் கொள்ளாது. சில நீதிபதிகள் எவ்விதக் காரணங்க ளுமே கூறாது தண்டிக்கும் விதத்தில் மாற்றப்பட்டி ருக்கிறார்கள். சில தலைமை நீதிபதிகள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக வெளிப்படை யாகவே பேசுகிறார்கள். ஒருவரை நீதிபதியாக்குவதற்கு எவ்விதமான வயது உச்சவரம்பும் கிடையாது. சிலர் வயதைக் கூறி நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், இரவோடிரவாக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். நான் பெயர்களைக் கூற விரும்பவில்லை.
கொலிஜியத்தின் ஆதிக்கம்
நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, உயர்நீதிமன் றங்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் எவருக்கும் கீழானவர்கள் (subordinate) அல்ல. உச்சநீதிமன்ற மும், உயர்நீதிமன்றங்களும் அரசமைப்புச் சட்டத் தின்கீழான மன்றங்கள். ஆனால், உச்சநீதிமன்ற கொலிஜியம், உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழான நிறுவனங்களாக மாற்றியிருக்கின்றன. சில புள்ளிவிவரங்களை உங்கள்முன் அளிக்க விரும்புகிறேன். டிசம்பர் 2 அன்று, சட்டஅமைச்சர் அவர்கள் என் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம்களிலிருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் பல மட்டங்களில் நிலுவையில் இருக்கின்றன என்று கூறியிருந்தார். அதாவது, நீதித்துறை சம்பந்தப்பட்ட துறையில் 75 பெயர்கள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 35 முன்மொழிவுகள் துறையின்கீழ் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முன்மொழிவுகள் பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கின்றன. 13 முன்மொழிவுகள் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அது நீள்கிறது. இவ்வாறாக உயர்நீதிமன்றங்களாலும், உச்ச நீதிமன்றத்தாலும் அனுப்பப்பட்ட நீளமான பட்டியல் கள் நிலுவையில் இருந்து வருகின்றன. இவ்வாறு நிலுவையில் இருப்பதால் மக்கள் ஏராள மாகச் சந்தேகப்படுகிறார்கள். நீங்கள் வெளிப்படை யான முறையைக் கொண்டிருக்க வேண்டும். உயர்நீதிமன்றங்கள் தற்போது தாங்கள் பெற்றி ருக்க வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கையில் வெறும் 59 சதவீதத்துடன் செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன.
வேறு பதவிகளுக்கு நியமிக்கலாமா?
நீதிபதிகள் ஓய்வு பெற்றபின்பு மீண்டும் நியமனம் செய்யப்படலாமா என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் பலர் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின் றனர். நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எதிராகப் பலர் தங்கள் நிலைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேராசிரியர் கே.டி. ஷா, ஓய்வு பெற்றபின்பு நீதிபதிகளுக்கு மறு நியமனம் அளிக்கக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார். பேராசிரியர் சிப்பன் லால் சக்சேனா, கூறியதை மேற்கோள் காட்டுகிறேன்: “நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்பு வேறு உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப் படலாம் என்கிற தூண்டுதல் இருக்குமாயின் இதனை ஆட்சியிலுள்ளவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பளித்துவிடும். இந்த நிபந்தனையை நீக்கா விட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் அல்லது ஆட்சியில் உள்ள எந்தவொரு கட்சியாவது இதனைப் பயன் படுத்திக்கொள்ளும். இது நீதித்துறையின் சுதந்தி ரத்தைப் பாதிக்கும்.”
நம்முடைய முன்னாள் சட்ட அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி, இது தொடர்பாக கூறுவதைக் கேளுங்கள்: “சில சமயங்களில், ஓய்வு பெறுவதற்கு முன்பு சில நீதிபதிகள் நடந்துகொள்ளும் விதம், அவர்கள் ஓய்வு பெற்றபின் சில பதவிகளில் அமர்த்து வதற்கான ஆவலால் செல்வாக்கு செலுத்துகிறது,” என்று அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். அருண் ஜெட்லி இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் மேலும், “இரு விதமான நீதிபதிகள் இருக்கின்றனர். ஒன்று, சட்டத்தைத் தெரிந்துள்ள நீதிபதிகள். மற்றொன்று, சட்ட அமைச்சரைத் தெரிந்துள்ள நீதிபதிகள். நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கொண்டி ருப்பது உலகிலேயே நம் நாட்டில் மட்டும்தான். ஓய்வு பெறும்வயது வந்தபின்னரும்கூட, நீதிபதிகள் ஓய்வு பெற விரும்புவதில்லை,” என்று கூறியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் மவுனங்கள் ஏன்?
உச்சநீதிமன்றத்தின் ஒரு சில தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் உள்ள வேதனையை வெளிப்படுத்த நான் தயங்க வில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ரபேல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக இயக்குநர் அலோக் வர்மா வின் அதிகாரங்கள் இரவோடிரவாக அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது. இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகும். ஒருநாள், இந்திய மாநிலம் ஒன்று, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, இந்த அரச மைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீதே மரண அடி கொடுக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதி மன்றம் இதுவரை எதுவுமே கூறாதிருப்பது, ஏன்?
நான் அயோத்தி தீர்ப்பு குறித்து எதுவும் கூறப்போவ தில்லை. அநாமதேய தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தங்களுக்கு ஆழமான கருத்துக்கள் இருப்பதாக ஓர் உறுதிவாக்குமூலத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. நன்கொடைகளின் வெளிப்படைத் தன்மையைப் பொறுத்தவரையில் இது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று தேர்தல் பத்திரங்களைக் குறிப்பிட்டிருந்தது. நீதிபதிகள் அதனை மறந்துவிட்டார்கள். இது தொடர்பான வழக்கைக் கையாண்ட நீதிபதியின் நேர்காணலை நான் பார்த்திருக்கிறேன். அவர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு குறித்து ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார். அந்த நீதிபதி யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் இந்த அவையின் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை. அமைச்சர் நிதின் கட்காரி கூட, ஒரு நீதிபதி ஓய்வு பெற்றபின் இரண்டு ஆண்டுகள் ஓய்வு கொடுத்து விட்டுப் பிறகுதான் அவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சர்கள் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி கூறிய தைக்கூட கேட்க ஏன் மறந்துவிட்டது?
ஒரு புதிய வர்க்கம்
இப்போதுள்ள நீதிபதிகள் நியமன முறையானது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிறது. ஒரு புதிய வர்க்கம் உருவாகிக் கொண்டி ருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். நான் புரிந்துகொள்கிறேன். நீதிபதிகளின் குடும்பங்களிலி ருந்து புத்திசாலித்தனமான நீதிபதிகள் வந்திருக்கி றார்கள். இந்தியாவில் இதுவரை இருந்துவந்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிகள் 47 பேரில் 14 பேர் பிராம ணர்கள். 1950இலிருந்து 1970 வரை உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகள் எண்ணிக்கை 14இல் 11 பேர் பிராமணர்கள். 1971-89இல்…(குறுக்கீடு) 1980 வரை உச்சநீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நியமனம் செய்யப் படவில்லை. நீதித்துறை செயல்பாடு என்பதும் ஜனநாயகப் பூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நீதித்துறையின் சுதந்திரம் மிகவும் முக்கிய மாகும்.
தமிழில்: ச.வீரமணி